கனடா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான கிரிக்கெட் போட்டியின் போது, மைதானத்தில் அரங்கேறிய ஒரு வேடிக்கையான சம்பவம் ரசிகர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியைக் காண வந்த ரசிகர்கள் அனைவரும் உற்சாகமாக கைகளை உயர்த்தி ‘மெக்சிகன் அலை’ கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஒரு பெண் ரசிகை, தனது கையில் மொபைல் போன் இருப்பதை மறந்து, அலையின் வேகத்திற்கு ஏற்ப உற்சாகமாக கைகளை உயர்த்தினார். துரதிர்ஷ்டவசமாக, அவர் கையை தூக்கிய அடுத்த நொடியே அவரது மொபைல் போன் கையை விட்டு நழுவி கீழே விழுந்தது.

“>

இந்த எதிர்பாராத மற்றும் வேடிக்கையான தருணம் அங்குள்ள கேமராவில் மிகத் துல்லியமாகப் பதிவாகியுள்ளது. தனது போன் கீழே விழுந்ததைக் கண்டு அந்தப் பெண் அதிர்ச்சியடைந்ததும், அதைத் தொடர்ந்து அங்கிருந்த மற்ற ரசிகர்கள் சிரித்ததும் வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். “இதுவே இந்த ஆட்டத்தின் மிகச் சிறந்த சிறப்பம்சம் என்றும், “போனை விட மெக்சிகன் அலை தான் அவருக்கு முக்கியமாகத் தெரிந்திருக்கிறது” என்றும் ரசிகர்கள் பலரும் இந்த சம்பவத்தை கிண்டலாகவும் வேடிக்கையாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.