ஜோஜிலா கணவாய் பாதையில் நிகழ்ந்த ஒரு திகிலூட்டும் விபத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பனிமூட்டமும், குறுகிய வளைவுகளும் நிறைந்த அந்த ஆபத்தான மலைப்பாதையில், திடீரென கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று பள்ளத்தை நோக்கி சரிந்து நழுவியது.

மேலும் லாரி பள்ளத்தில் விழும் சில நொடிகளுக்கு முன்னதாகவே, சமயோசிதமாகச் செயல்பட்ட ஓட்டுநரும், அவரது உதவியாளரும் வாகனத்திலிருந்து குதித்துத் தங்களின் உயிரைக் காப்பாற்றிக்கொண்டனர். இந்த அதிர்ச்சிகரமான காட்சிகள் அங்கிருந்த கேமராவில் பதிவாகி, காண்போரை உறைய வைத்துள்ளது. மலையடிவாரத்தில் லாரி பலமுறை உருண்டு சிதைந்த காட்சி, அந்தப் பாதையின் அபாயத்தை மீண்டும் ஒருமுறை உலகுக்கு உணர்த்தியுள்ளது.

“>

இதனால் காயங்களுடன் உயிர் தப்பிய இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறுகிய மற்றும் சவாலான மலைப் பாதைகளில் வாகனங்களை ஓட்டும்போது ஓட்டுநர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் எச்சரிக்கிறது. அதிர்ஷ்டவசமாகப் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டாலும், இந்த விபத்து அந்தப் பாதையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது.