கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், உலகிலுள்ள 195 நாடுகளின் தேசியக் கொடிகளைப் பார்த்து, அவற்றின் பெயர்களை நொடிப் பொழுதில் துல்லியமாகக் கூறி உலக சாதனை படைத்துள்ளார். இந்தச் சிறுமியின் அசாத்திய நினைவாற்றல் மற்றும் திறமையைப் பார்த்த ஆசிரியர்களும் பொதுமக்களும் வியந்து பாராட்டி வருகின்றனர்.
195 நாடுகளின் தேசியக் கொடிகளை வைத்து நாட்டின் பெயரை கூறிய கடலூரை சேர்ந்த பள்ளி மாணவி.. பாராட்டிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்#MinsierRajmohan | #Student | #CountryName | #PolimerNews pic.twitter.com/KQPwr7Yo0A
— Polimer News (@polimernews) May 28, 2026
இந்தத் தகவல் சமூக வலைத்தளங்கள் மூலம் பரவி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனின் கவனத்திற்குச் சென்றுள்ளது. உடனே அந்த மாணவியின் அசாத்திய திறமையைப் பாராட்டி, அவருக்கு வாழ்த்துகளையும் ஊக்கத்தொகையையும் அமைச்சர் வழங்கியுள்ளார். அரசுப் பள்ளி மாணவிகள் நினைத்தால் உலக அரங்கில் மிகப்பெரிய சாதனைகளைப் படைக்க முடியும் என்பதற்கு இந்த மாணவியே ஒரு சான்று எனப் பலரும் நெகிழ்ச்சியுடன் பேசி வருகின்றனர்.
