மகாராஷ்டிராவின் தடோபா அந்தாரி புலிகள் காப்பகத்தில், புகழ்பெற்ற பெண் புலியின் குட்டிகள் செய்யும் குறும்புத்தனங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. காட்டின் இயற்கை சூழலில் இந்த குட்டிகள் சுதந்திரமாக விளையாடும் அழகிய தருணங்கள் கேமராவில் சிக்கியுள்ளன.
இது குறிப்பாக, ஒரு புலிக்குட்டி மிகுந்த உற்சாகத்துடன் மரத்தின் மீது ஏற முயற்சிப்பதையும், அதே சமயம் அதன் சகோதர குட்டியும் அங்கு வந்து ஒரு வேடிக்கையான போட்டியில் ஈடுபடுவதையும் வீடியோவில் காணலாம். இந்த விளையாட்டின் உச்சகட்டமாக, மரத்தில் ஏற முயன்ற ஒரு குட்டி தனது சகோதரனை லாவகமாக கீழே தள்ளிவிடும் காட்சி பார்ப்பவர்களை ரசிக்க வைத்துள்ளது.
ताडोबा-अंधारी व्याघ्रप्रकल्पात ‘कुवानी’ या नावाने ओळखल्या जाणाऱ्या वाघिणीच्या बछड्यांनी अक्षरशः जंगल डोक्यावर घेतले आहे. दररोज त्यांचा जंगलात काही ना काही उपद्व्याप सुरूच असतो. अजून वर्षभराचे देखील झाले नाहीत आणि त्यांना झाडावर चढण्याचे वेध लागले आहेत. आदी येरमे यांनी हा क्षण… pic.twitter.com/sdSPIAwlJN
— LoksattaLive (@LoksattaLive) March 18, 2026
“>புலிக்குட்டிகளின் சேட்டை
இந்த சுட்டித்தனம் வெறும் விளையாட்டு மட்டுமல்ல, புலிக்குட்டிகளின் இயற்கையான வளர்ச்சி மற்றும் அவற்றின் சமூகப் பிணைப்பின் ஒரு முக்கிய பகுதியாகும். சிறுவயதிலிருந்தே இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவது, அவற்றின் வேட்டையாடும் திறன் மற்றும் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்க உதவுகிறது.
இந்நிலையில் தடோபாவில் படம்பிடிக்கப்பட்ட இந்த வீடியோ வனவிலங்கு ஆர்வலர்களுக்கு ஒரு விருந்தாக அமைந்துள்ளது. புலியும் அதன் குட்டிகளும் தற்போது சுற்றுலாப் பயணிகளின் முக்கிய ஈர்ப்பாக மாறியுள்ளதோடு, புலிகள் பாதுகாப்பு மற்றும் அவற்றின் வாழ்விடங்கள் குறித்த விழிப்புணர்வையும் மக்களிடையே அதிகப்படுத்தியுள்ளன.
