இன்றைய நவீன உணவகங்களுக்கு மத்தியில், நம் சிறுவயது ஞாபகங்களை தட்டி எழுப்பும் ஒரு வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. ஒரு தெருவோர வியாபாரி, பெரிய வாணலியில் சூடான மணலை வைத்து, அதில் வண்ணமயமான சிப்ஸ் வகைகளை எண்ணெய் இல்லாமல் வறுத்து எடுக்கும் அந்த வித்தை பார்ப்பவர்களை வியக்க வைக்கிறது. “இந்தியாவின் ஆரோக்கியமான ஸ்ட்ரீட் ஃபுட்” என கிண்டலாக பகிரப்பட்டாலும், எண்ணெய் இல்லாமல் மணலில் பொரித்தெடுக்கப்படும் இந்த சிப்ஸ்கள் இன்றும் பல ஊர்களில் ஃபேமஸ். அந்த சூடான மணலில் சிப்ஸ் பூப்போல மலர்வதைப் பார்க்கவே ஒரு கூட்டம் கூடுகிறது.

​இந்த வீடியோவை பார்த்த பலரும், “ஸ்கூல் முடிந்து வரும்போது அந்த ஒரு ரூபாய் பாக்கெட்டை வாங்கி நண்பர்களுடன் பகிர்ந்துகொண்ட அந்த காலம் இனி திரும்புமா?” என ஏக்கத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர். சுகாதாரம் பற்றி இன்று ஆயிரம் கேள்விகள் எழுந்தாலும், அந்த மணல் வறுவலின் ருசியும், அதோடு கலந்திருக்கும் நம் பால்ய கால நினைவுகளும் தனித்துவமானவை. இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட தெருவோர உணவு கலாச்சாரத்திற்கு இந்த வீடியோ ஒரு மிகச்சிறந்த சான்று.