சமூக வலைதளங்களில் ஒரு வீடியோவை வைரலாக்க வேண்டும் என்ற குறுகிய எண்ணத்தில், ஒரு நபர் எந்த காரணமும் இல்லாமல் இந்திய இளைஞர் ஒருவரைத் தாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் தாக்கியதோடு மட்டுமல்லாமல், அதைத் தனது நண்பரைக் கொண்டு வீடியோவாகப் பதிவு செய்து வேடிக்கை பார்த்திருக்கிறார். ஒரு மனிதனை அடித்து அதைப் பெருமையாக இணையதளத்தில் பதிவிட நினைக்கும் இவர்களின் வக்கிரமான புத்தி, இன்று சமூகத்தில் எந்த அளவிற்கு மனிதாபிமானம் குறைந்து வருகிறது என்பதைக் காட்டுகிறது. ஒருவரைத் துன்புறுத்துவதன் மூலம் கிடைக்கும் ‘லைக்ஸ்’ (Likes) மற்றும் ‘வியூஸ்’ (Views) ஒருபோதும் உண்மையான மகிழ்ச்சியைத் தராது என்பதை இவர்கள் உணரவில்லை.
A black man randomly assaulted an Indian teenager while his friend filmed the attack to post on social media. Why are people like this? pic.twitter.com/1A3SWkcRyq
— Ian Miles Cheong (@ianmiles) January 14, 2026
ஆனால், இந்த அநியாயத்தை அந்த இந்திய இளைஞர் அமைதியாக வேடிக்கை பார்க்கவில்லை. தன்னைத் தாக்கிய நபருக்குப் பயந்து ஓடாமல், அங்கிருந்த ஒரு கட்டையை எடுத்துக்கொண்டு அந்த நபரைத் துணிச்சலாகத் துரத்திச் சென்று பதிலடி கொடுக்கத் தொடங்கினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அந்த இளைஞரின் தைரியத்தைப் பலரும் பாராட்டி வருகின்றனர். “தப்பு செய்தவன் யாராக இருந்தாலும் திருப்பி அடிப்போம்” என்ற அந்த இளைஞரின் வேகம், வன்முறையைத் தூண்டுபவர்களுக்கு ஒரு சரியான பாடமாக அமைந்திருக்கிறது.
