சமூக வலைதளங்களில் பக்தி பரவசமூட்டும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஒரு அனுமன் கோவிலில் பக்தர்கள் அனைவரும் ஒன்று கூடி மேளம் மற்றும் தாளங்களுடன் தீவிரமாக பஜனை பாடிக்கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக அங்கு வந்த ஒரு குரங்கு, பஜனைப் பாடலின் தாளத்திற்கு ஏற்ப மனிதர்களைப் போலவே தனது இரண்டு கால்களால் எழுந்து நின்று நடனமாடத் தொடங்கியது. இசையின் வேகத்திற்கு ஏற்ப அந்த குரங்கு ஆடிய விதம் அங்கிருந்த பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. இந்த அதிசய நிகழ்வைக் கண்ட மக்கள், ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என முழக்கமிட்டு, அந்த குரங்கினை அனுமனின் உருவமாகவே கருதி வழிபடத் தொடங்கினர்.

இணையத்தில் காட்டுத்தீயாக பரவி வரும் இந்த வீடியோவை பார்த்த பலரும், இது வெறும் தற்செயலான நிகழ்வு அல்ல, இது ‘பஜனைக்கு மகிழ்ந்து வந்த அனுமனின் ஆசீர்வாதம்’ என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர். “அனுமன் இன்றும் தனது பக்தர்கள் பாடும் இடத்தில் தங்கியிருக்கிறார் என்பதற்கு இதுவே சாட்சி” என ராம பக்தர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

<a href=”http://

“>
விலங்குகளுக்கும் இறை பக்திக்கும் மொழி தேவையில்லை என்பதை உணர்த்தும் இந்த வீடியோ, பார்ப்பவர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.