கர்நாடகா மாநிலம் பெங்களூரு, ஹெக்டே நகர் அருகே இயங்கிக் கொண்டிருந்த BMTC பேருந்து ஓட்டுநரை, ஒரு டாக்ஸி ஓட்டுநர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்துக்கான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, ஓட்டுநருக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வலுத்துள்ளது.
சிவாஜிநகரில் இருந்து யெலஹங்கா நோக்கி சென்ற BMTC பேருந்து, மதியம் 12.30 மணியளவில் ஓடிக் கொண்டிருந்தபோது, முந்திச் செல்லும் தருணத்தில் டாக்ஸி மீது மோதியதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த டாக்ஸி ஓட்டுநர் நரசிம்மய்யா, பேருந்தை ஒரு கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று நிறுத்தினார்.
Bengaluru Road Rage Goes Next Level: BMTC Driver & Cabby Fight While Bus Is Moving Who Protects Passengers?
A verbal and physical clash broke out between a BMTC bus driver and a cab driver in Bengaluru, turning an ordinary commute into a dangerous display of road rage. In the… pic.twitter.com/SDeiz4IE10
— Karnataka Portfolio (@karnatakaportf) December 10, 2025
பயணிகள் எடுத்த வீடியோவில், டாக்ஸி ஓட்டுநர் பேருந்து ஓட்டுநர் நாகேஷ் மற்றும் நடத்துனர் கெஞ்சப்பாவை திட்டி தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. பேருந்து இன்னும் இயங்கிக் கொண்டிருந்தபோது, டாக்ஸி ஓட்டுநர் ஓட்டுநரின் கையை ஸ்டீயரிங் வீலில் இருந்து விலக்க முற்படும் காட்சி வீடியோவில் தெளிவாக தெரிகிறது. இதில் பயணிகள் பீதி அடைந்தனர். ஒரு கண நேரம் கவனச்சிதறல் ஏற்பட்டிருந்தாலும், பெரிய விபத்து நிகழ்ந்திருக்க வாய்ப்பு அதிகம் இருந்தது என போலீசார் தெரிவிக்கின்றனர்.
நிலைமை கட்டுக்குள் இல்லாமல் போகக் கூடுமென்ற அச்சத்தில், BMTC ஓட்டுநர் பேருந்தை நேரடியாக சம்பிகேஹள்ளி காவல் நிலையத்திற்குத் திருப்பிவிட்டார். இரு தரப்பினருக்கும் காவல்துறை ஆலோசனை வழங்கியது. ஆனால் BMTC ஓட்டுநர் முறையீடு செய்யாததால், FIR பதிவு செய்ய இயலவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நகரத்தில் அதிகரித்து வரும் சாலை சீற்றம் மற்றும் வாகனம் ஓட்டும் ஒழுக்கக்குறைவு குறித்து மீண்டும் கேள்விக்குறி எழுப்பியுள்ளது. பொதுப் போக்குவரத்து ஓட்டுநர்களை ஆபத்தில் ஆழ்த்தும் இத்தகைய செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் வீடியோ வைரலாகி பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
