ஹாங்காங் சிக்ஸஸ் போட்டியில், தொடக்க ஆட்டத்தில் இந்தியாவிடம் தோல்வியடைந்தாலும், இறுதிப் போட்டியில் குவைத்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி கோப்பையை வென்றது. இந்த வெற்றிக்குப் பிறகு, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஷாசாத், சமூக ஊடகமான X – இல் பதிவிட்ட ஒரு கருத்தால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
மழையால் பாதிக்கப்பட்ட லீக் போட்டியில் பாகிஸ்தானை 2 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த பிறகு, இந்திய அணியில் பங்கேற்ற முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் ஒரு பதிவை இட்டிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக ஷாசாத், “ஹாங்காங் சிக்ஸர்களுக்கு வேடிக்கையான முடிவு. வழக்கம் போல் வியாபாரம்” என்று பதிவிட்டார்.
Fun end to the Hong Kong Sixes
Business as usual 😉#WeHaveARealTrophy #PAKISTANZINDABAD https://t.co/ftxVenMpDQ pic.twitter.com/IEdvzzVA46
— Muhammad Shahzad (@imshahzad27) November 9, 2025
“>
ஆனால், ஷாசாத் பயன்படுத்திய #WeHaveARealTrophy (எங்களிடம் ஒரு உண்மையான கோப்பை உள்ளது) என்ற ஹேஷ்டேக் தான் ரசிகர்களைச் சமூக ஊடகங்களில் கோபப்படுத்தியது. இந்த ஹேஷ்டேக், அண்மையில் இந்தியா 2025 ஆசியக் கோப்பையை வென்றும், கோப்பையை இன்னும் ஒப்படைக்காத சர்ச்சையைச் சுட்டிக்காட்டி இந்தியாவை கேலி செய்யும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
Fun end to the Hong Kong Sixes
Business as usual 😉#WeHaveARealTrophy #PAKISTANZINDABAD https://t.co/ftxVenMpDQ pic.twitter.com/IEdvzzVA46
— Muhammad Shahzad (@imshahzad27) November 9, 2025
“>
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமான மொஹ்சின் நக்வியின் கைகளிலிருந்து கோப்பையைப் பெற சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி மறுத்ததால், கோப்பை வழங்கும் விழா முழுவதும் நிறுத்தப்பட்டு, கோப்பை இன்னும் இந்திய அணியிடம் ஒப்படைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்தப் போட்டியில் ஓய்வுபெற்ற இந்திய வீரர்கள் மட்டுமே பங்கேற்ற நிலையில், பாகிஸ்தான் அணியில் தீவிர கிரிக்கெட் வீரர்கள் இருந்தது, ஷாசாத்தின் பதிவுக்கு எதிராக ரசிகர்கள் விமர்சனம் செய்ய ஒரு காரணமாக அமைந்தது.
