நாகை மாவட்ட அரசு நெல் கொள்முதல் நிலையத்தில், எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் வருகை தருவதாக தகவல் வந்ததும் திடீரென கொள்முதல் பணிகள் வேகமாக ஆரம்பிக்கப்பட்டதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.

இதுவரை நெல் மூட்டைகள் குவிந்து கிடந்த நிலையிலிருந்து, திடீர் சுத்திகரிப்பு, எடை போடுதல் உள்ளிட்ட பணிகள் அவசர அவசரமாக நடைபெறுவதாக அதிமுகவின் ஐ.டி. விங் பிரிவு தனது சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளது. எடப்பாடியார் வருகையால் தான் அரசு இயந்திரம் செயல்பட ஆரம்பிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது என்பது இந்த குற்றச்சாட்டின் மையமாகும்.

“>

அதிமுகவின் பதிவில், “மாண்புமிகு எடப்பாடியார் வருகையால் இவ்வளவு அவசரமாக நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. இதே அக்கறையை விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்வதில் முன்பே காட்டியிருந்தால் இன்று இவ்வளவு விவசாயிகள் கண்ணீர் சிந்தியிருக்க மாட்டார்கள். @mkstalin இதற்கு பதில் சொல்ல வேண்டும்” என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.