திருவனந்தபுரம் மாவட்டத்தில் இன்று ஏற்பட்ட சாலை விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த ஒரு சரக்கு வாகனம், சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

மோதிய வேகத்தில்  அந்த ஆட்டோ கவிழ்ந்து, அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது செல்லும் நிலை ஏற்பட்டது. இந்த திடீர் சம்பவம் அருகிலிருந்தோர் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

“>

 

விபத்தில் ஆட்டோவில் இருந்தவர்கள் பலரும் காயமடைந்த நிலையில் அருகிலுள்ள மருத்துவமனையில் அவசரமாக சேர்க்கப்பட்டுள்ளனர்.  இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போக்குவரத்து பாதுகாப்பு தொடர்பாக மீண்டும் கேள்விகள் எழும் வகையில் இந்த சம்பவம் அமைந்துள்ளது.