மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லாலுக்கு, 2023ம் ஆண்டுக்கான இந்திய சினிமாவின் மிக உயரிய விருதாக கருதப்படும் தாதாசாகேப் பால்கே விருது வழங்க மத்திய அரசு அறிவித்துள்ளது.

கடைசியாக ‘ஹிருதயபூர்வம்’ படத்தில் நடித்திருந்த அவர், தற்போது நந்தா கிஷோர் இயக்கியுள்ள ‘விருஷபா’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இது அடுத்த மாதம் 16ம் தேதி திரையிடப்படுகிறது. சினிமா துறையில் நீண்ட ஆண்டுகளாக தனது சிறப்பான நடிப்பில் மூழ்கடித்து வந்ததற்காகவும், அதற்கான மிகப்பெரிய பங்களிப்பைச் செய்ததற்காகவும் மோகன்லாலுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

வருகிற செப்டம்பர் 23ம் தேதி நடைபெறும் 71வது தேசிய விருதுகள் விழாவில், அவருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது.