இணையத்தில் வைரலான ஒரு வீடியோவில், ஒரு Influencer பிராங்க் செய்யும் போது, தனது எல்லையை மீறி, ஏழை கடைக்காரர்களின் உடல்நலத்துடன் விளையாடியுள்ளார். உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜைச் சேர்ந்த இந்த வீடியோவில், அவர் ஐஸ்கிரீமில் பிறந்தநாள் விழாக்களில் பயன்படுத்தப்படும் வெள்ளை நிற கெமிக்கல் ஸ்ப்ரேயை தெளித்து, அதை காய்கறி விற்கும் ஏழை வியாபாரிகளுக்கும், பொது மக்களுக்கும் ஐஸ்கிரீமாகக் கொடுத்து ஏமாற்றுகிறார். இதைப் பார்த்த இணையவாசிகள் கோபமடைந்து, இது பிராங்க் என்று அழைக்க முடியாது என்றும், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறையை குறிப்பிட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர்.
इस असामाजिक तत्व पर तुरन्त कार्रवाई करें 🚨
नाम :- vikash_prankss
पता :- जिला (प्रयागराज) उत्तर प्रदेशश्रीमान @igrangealld जी विकाश नामक युवक prank video बनाने के नाम पर (केमिकल स्प्रे) का उपयोग करके असहाय गरीब लोगों के स्वास्थ्य के खिलवाड़ कर रहा है।@prayagraj_pol @dgpup pic.twitter.com/IiSeDMiKQZ
— Anjali Yadav 🐦 (@Anjali_Yadav_32) September 13, 2025
வீடியோவில், அந்த இளைஞன் கெமிக்கல் ஸ்ப்ரே தெளிக்கப்பட்ட ஐஸ்கிரீம் கோனை மக்களுக்கு கொடுக்கும்போது, கேமராவைப் பார்த்து புன்னகைக்கிறார். 40 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ இணையத்தில் பரவியதும், பயனர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். ஒரு பயனர் @Anjali_Yadav_32, “விகாஸ் என்ற இளைஞன் பிராங்க் என்ற பெயரில் ஏழைகளின் உடல்நலத்துடன் விளையாடுகிறான், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பதிவிட்டார். மற்றொரு பயனர், “இந்த ஐஸ்கிரீமால் யாருக்காவது உடல்நலப் பிரச்சினை ஏற்பட்டால், பொறுப்பு யார் மீது இருக்கும்?” என கேள்வி எழுப்பினார். மக்கள் இந்த Influencer மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
