சமூக வலைத்தளத்தில்  சில வீடியோக்கள் மிகவும் சுவாரஸ்யமாக மீண்டும் மீண்டும் பார்க்க விரும்புவோம்.  அப்படியொரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், ஒரு யானை ஒரு பெண்ணை பார்த்து பயந்து, தன் பாதையை தானே மாற்றிக் கொள்கிறது. இது ஒரு சாதாரண நிகழ்வாக தோன்றினாலும், இந்த வீடியோவை பார்த்தவர்கள் தங்கள் சிரிப்பை அடக்க முடியவில்லை.

வீடியோவில், ஒரு பெண் ஸ்கூட்டியில் செல்கிறார். அப்போது, அவருக்கு முன்னால் ஒரு கூட்டமான யானைகள் வருகின்றன. முதலில் பெண் பயப்படுகிறார், ஆனால் ஆச்சரியமாக, யானைகள் அந்த பெண்ணை பார்த்தவுடன் தங்கள் பாதையை மாற்றிக் கொள்கின்றன. இதைப் பார்க்கும்போது, யானைகளுக்கு அந்த பெண்ணை பார்த்து பயம் வந்தது போல தோன்றுகிறது.

இந்த வீடியோ @sanatan_kannada என்ற எக்ஸ் கணக்கில் பகிரப்பட்டு, ஆயிரக்கணக்கானவர்களால் பார்க்கப்பட்டு, பலர் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். ஒருவர், “யானைகளும் இந்த பெண்ணை பார்த்து பயந்திருக்கும்” என்று கமெண்ட் செய்துள்ளார், மற்றொருவர், “இதை பார்த்து சிரிப்பை அடக்க முடியவில்லை” என்று கூறியுள்ளார்.