மாஸ்டர்செஃப் போட்டியில் பங்கேற்ற ஆஸ்திரேலிய பிரபல சமையல்கலை நிபுணரான சாரா டோட், இந்தியாவில் தெரு உணவுகள் மீது உள்ள தனது அன்பை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.
சமீபத்தில் மும்பைக்கு வந்த அவர்,எல்கோ ஸ்டால் என்ற பானி பூரி ஸ்டாலுக்குச் சென்று, உள்ளூர்வாசிகள் மிக விரும்பும் பானி பூரியை சாப்பிட்டார். சாப்பிடுவதில் மட்டும் திருப்தி அடையாமல், ஒரு சவாலாக “அரை நிமிடத்தில் எத்தனை பானி பூரி சாப்பிட முடியும்?” என்ற கேமிலும் அவர் ஈடுபட்டார்.
அந்த வீடியோவில், விற்பனையாளரை விரைவில் பூரி தயாரிக்கச் சொல்லியபடி சிரித்துக்கொண்டே சாப்பிடுகிறார். சுவையின் காரணமாக அவர் வாயில் வெடிக்கும் உணர்வை ரசித்துச் சொல்வதை வீடியோவில் காணலாம்.
View this post on Instagram
“>
இந்த அனுபவம் சாரா டோட்டுக்கு உணவின் பின்னாலுள்ள பாரம்பரியத்தையும் புரிந்துகொள்ள உதவியுள்ளது. எல்கோ ஸ்டால் 1968-ஆம் ஆண்டு ஒரு சாதாரண வண்டியாகத் தொடங்கி, இன்று பிரபலங்களும் மாணவர்களும் வரிசையாக வருகிற உணவகமாக மாறியுள்ளது.
இதை பற்றி அவர் சொல்லும் போது, “இந்த பானி பூரியில் இருக்கும் குளிர்ச்சியும் காரத்தனமும் தான் இதைப் பிரத்தியேகமாக்கும் மந்திரம்” என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
இதற்கு முன் அமிர்தசரஸில் பப்பட் சாட் சாப்பிட்ட அனுபவத்தைப் பற்றியும் பகிர்ந்துள்ளார். மும்பையின் உணவு கலாச்சாரம், தெரு உணவின் தனித்துவம் ஆகியவை சாரா டோட்டின் பயணத்தை இனிமையாக மாற்றியுள்ளன
