சமூக வலைதளங்களில் தற்போது ஒரு அற்புதமான விலங்கு வீடியோ வைரலாகியுள்ளது. இதில் ஒரு தாய் வாத்து, தனது ஏழு குட்டி வாத்துகளுக்கு வேட்டையாடுபவர்களிடமிருந்து தங்களை எப்படிப் பாதுகாத்துக்கொள்வது என்பதை விளையாட்டுத்தனமான முறையில் கற்றுத்தருகிற காட்சி அனைவரையும் மயக்கவைத்திருக்கிறது.
முதலில் தாய் வாத்து ஏரிக்குள் சறுக்கி மறைந்துவிடுகிறது. அதையடுத்து ஒரு வேறு பகுதியில் இருந்து வெளியே வந்து குழந்தைகளை அழைக்கிறது. குழந்தைகள் தாயை நோக்கி ஓடிச் செல்கின்றன. இந்தச் செயலில் பாதுகாப்பு பயிற்சியும், தாய் பறவையின் அன்பும் ஒரே நேரத்தில் வெளிப்பட்டதாகும்.
A mother duck playing hide and seek with her ducklingspic.twitter.com/gc9TPy7len
— Massimo (@Rainmaker1973) August 14, 2025
“>
காணொளியில் காணப்படும் காட்சிகள், ஒரு தாயின் அறிவும், பரிவும் எல்லா உயிரினங்களிலும் ஒரே மாதிரியானதென்பதை உணர்த்துகின்றன.
குழந்தைகளை பாதுகாக்கும் முறையில் அறிவும் அன்பும் எப்படி இணைகின்றன என்பதை காட்டும் இந்த வீடியோ, தற்போது இணையத்தை ஆட்சி செய்து வருகிறது.
