மழை என்றாலே பெரும்பாலானோர் வீடிற்குள் ஒளிந்து கொள்கிறார்கள். ஆனால் மும்பைவாசிகள் அதை விட பெரும் உற்சாகத்துடன் அதை ஒரு கொண்டாட்டமாக மாற்றுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. தற்போது மும்பையில் பெய்து வரும் இடியுடன் கூடிய கனமழையால் பல வீதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன.
அதிலும், ஒரு நபர் தண்ணீரில் மூழ்கிய சாலையில் தானாகவே மேடையாக்கி, ‘ஆரா ஃபார்மிங்’ நடனம் ஆடுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் சூப்பர் ஹிட்டாக பரவி வருகிறது.
இந்த வீடியோவை @Madan_Chikna என்ற X பயனர் பகிர்ந்துள்ளார். “மும்பையில் பொழுதுபோக்கு ஒருபோதும் நிற்காது… நிகழ்ச்சி தொடர வேண்டும்!” என அவர் தெரிவித்துள்ளார். சற்று நேரத்திலேயே இந்த வீடியோ 4.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கடந்து வைரலானது. வீடியோவில் அந்த நபர், வெள்ளத்தில் மூழ்கிய ஒரு தடுப்புச் சுவரில் நின்றுகொண்டு மிகவும் ரசிக்கத்தக்க மற்றும் சிரிக்க வைக்கும் வகையில் நடனம் ஆடுகிறார். அவருடைய ஆர்வமும், நடனமும்தான் இப்போது இணையத்தை கலக்கி வருகிறது.
Entertainment never stops in Mumbai. The show must go on! #MumbaiRains pic.twitter.com/sySNLzC0cx
— Godman Chikna (@Madan_Chikna) August 20, 2025
“>
மழையும் வெள்ளமும் மும்பைவாசிகளின் போக்கை மாற்ற முடியாது என்பதற்கு இது ஒரு ஆதாரமாக மாறியுள்ளது. மழையிலும் மகிழ்ச்சியுடன் வாழ கற்றுக்கொடுத்த மும்பையின் ஆற்றல் மிக்க இந்த வீடியோவின் மூலம் மேலும் ஒருமுறை வியப்பை ஏற்படுத்தியுள்ளது. #MumbaiRains #ViralDanceVideo என்ற ஹாஷ்டேக்குகள் தற்போது டிரெண்டிங்கில் இருக்கின்றன.
