மும்பையின் பாந்த்ராவில் உள்ள பாபா மருத்துவமனையின் 11 மாடி கட்டிடம், நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கையாக உயர்ந்து நிற்கிறது. புதுப்பொலிவுடன், உயரமாக காட்சியளிக்கும் இந்த கோபுரம், மருத்துவத்திற்கு முன்னேற்றத்தின் அடையாளமாக தோற்றமளிக்கிறது.

ஆனால், உள்ளே நுழையும் நோயாளிகளுக்கு இது வெறும் மாயை. மூடப்பட்ட வார்டுகள், பூட்டப்பட்ட கதவுகள், இயங்காத சேவைகள் என, எதிர்பார்ப்புகளை இந்த மருத்துவமனை பொய்யாக்குகிறது.

நோயுற்ற குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் மாடி மாடியாக ஏறி, ஊழியர்கள் இல்லாத வெறுமையை மட்டுமே சந்திக்கின்றனர். முதியவர்கள் உரிய கவனிப்பு எதிர்பார்த்து வருகையில், முடிவில்லாத காத்திருப்போ, வேறு இடத்திற்கு அனுப்பப்படுவதோ மட்டுமே கிடைக்கிறது.

ஒவ்வொரு பூட்டப்பட்ட அறையும் நம்பிக்கையை நொறுக்குகிறது.  புறக்கணிப்பின் சின்னமாக மாறியுள்ளது.  இது மருத்துவமனைனு பார்க்கறவங்களுக்கு தோணலாம், ஆனா உள்ளே எதுவுமே இல்லாத வெறும் ஓடு மாதிரி இருக்கு.