
உத்தரபிரதேச மாநிலம் ஹஸ்ரத்பூர் நகரில், ஒரு பெண் பொதுமக்கள் முன்னிலையில் ஆட்டோ ஓட்டுநரை அறைந்தும், செருப்பால் அடித்தும் தாக்கிய அதிர்ச்சிகரமான சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால், இது குறித்து தற்போது காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீனா என்ற பெண் தனது வீட்டிலிருந்து சந்தைக்குச் செல்லும் வழியில் சென்றபோது, அவரது சேலை அருகே சென்ற ஒரு ஆட்டோவில் சிக்கிக் கொண்டதாம். அதனால், அவர் கீழே விழும் நிலைக்கு சென்றதாகவும், அதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் கோபமடைந்த அவர், ஆட்டோவை நிறுத்தச் சொல்லி, ஓட்டுநரை இழுத்து கீழே இறக்கி, அறைததுடன், பின்னர் தனது செருப்பால் அடித்ததாகக் கூறப்படுகிறது.
रिक्शे वाले पर ये महिला ग़ज़ब भड़की हैं. देखिए कैसे ये उसे पीट रही हैं. बात सिर्फ़ इतनी है कि महिला की सारी खड़े ऑटो में फँस गई थी. घटना बदायूं का है.
pic.twitter.com/8UWC2pFaNI— Priya singh (@priyarajputlive) June 30, 2025
தாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் ‘தேவேந்திரா’ என அடையாளம் காணப்பட்டுள்ளார். வீடியோவில், அந்தப் பெண் அவரது ஆடைகளை கிழிக்கும் அளவுக்கு தாக்குவதை காணலாம். இதைச் சுற்றி நின்ற பொதுமக்கள் யாரும் தலையிடாதது, தகவல் பரவியதும் சமூகத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், ஹஸ்ரத்பூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.