முன்னதாக அன்புமணி ராமதாஸ் பாஜக நிறுவனர் ராமதாஸ் குறித்து பேசி இருந்தார். அப்போது அவர் கடந்த 5 ஆண்டுகளாக ராமதாஸ் குழந்தை போல் இருக்கிறார். அதனால் பாமகவில் எனக்கு தான் அதிகாரம் உள்ளது என்று கூறியிருந்தார். இந்நிலையில் இதற்கு ராமதாசின் நெருங்கிய ஆதாரவாளரான எம்எல்ஏ அருள் கட்டணம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது எம் எல் ஏ, எம் பி உள்ளிட்ட எந்த பதவிகளுக்கும் ராமதாஸ் ஆசைப்படவில்லை. அன்புமணி, அவரை இழிவுபடுத்துவதை பார்த்து விட்டு சும்மா இருக்க முடியாது.

ராமதாஸ் தான் அக்கட்சிக்கு தாய். தனியாக கட்சியை வளர்த்தவர் அவர். 5 ஆண்டுகளாக ராமதாஸ் குழந்தையாக மாறிவிட்டார் என்று அன்புமணி கூறியுள்ளார். அந்த குழந்தை தானே 3 ஆண்டுகளுக்கு முன்பு உங்களை தலைவராக அறிவித்தார். குழந்தையின் அறிவிப்பு எப்படி செல்லும்?. தெருவில் இலந்தை பழம் விற்பவர் கேவலமானவரா?. ராமதாஸை அவமானப்படுத்துவதாக நினைத்து தெருவோர வியாபாரிகளை பாட்டாளிகளை அன்புமணி அவமானப்படுத்தியுள்ளார் என்று தெரிவித்தார்.