பெங்களூருவை சேர்ந்த கன்னட நடிகை ரன்யா ராவ். இவர் சமீபத்தில்  துபாயிலிருந்து பெங்களூருக்கு வந்தபோது  தங்கம் கடத்தி வந்ததால் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர் “தன்னுடன் இருக்கும் கைதிகள் தனக்கு தொல்லை கொடுக்கிறார்கள். எனவே எனக்கு தனி அறை வேண்டும்” என்று கூறினார். ரன்யா ராவ் சிறையில் யாருடனும் பேசுவது இல்லை என்று கூறப்படும் நிலையில் அவருடன் வசித்து வரும் சில பெண் கைதிகள் அவரை கேலி கிண்டல் செய்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அவர்கள் சிறைச்சாலை எப்படி இருக்கிறது? தங்க கடத்தல் ராணி எப்படி இருக்கிறாய்? என்று தன்னை கிண்டல் செய்கிறார்கள். எனவே மன வேதனையிலிருந்த ரன்யா ராவ் சிறை அதிகாரிகளிடம் தனக்கு வேறு தனி அறை ஒதுக்க வேண்டும் என்று வக்கீல் மூலம் வலியுறுத்தியுள்ளார். ஆனால் சிறை அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் பெண் கைதிகளின் தொல்லைகளாலும், கேலி, கிண்டல்களாலும் ரன்யா ராவ் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார் என்று கூறப்படுகிறது.