வேலூர் மாவட்டம் ஆசனபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மனைவி சரண்யா. இந்த தம்பதியினருக்கு 3 வயதில் சஞ்சீவன் என்ற மகனும், ஒரு வயதில் தமிழ் யாழினி என்ற மகளும் உள்ளனர். நேற்று ஆனந்தனுக்கு பிறந்தநாள்.

இதனால் சரண்யா தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் கோவிலுக்கு செல்ல வேண்டும் என கணவரை அழைத்தார். உடனே ஆனந்தன் கம்ப்யூட்டர் சென்டரை திறந்து வைத்துவிட்டு வருவதாக கூறியுள்ளார். இது தொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த சரண்யா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்த சஞ்சீவன் தாயின் கால்களை பிடித்துக் கொண்டு அம்மா அம்மா என கதறி அழுதான். அந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் சரண்யாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சரண்யா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.