மனிதர்களை போலவே, விலங்குகளுக்கும் உணர்வுகள் உள்ளன என்பது பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. தற்போது, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் ஒரு வீடியோ, இதை மீண்டும் உறுதி செய்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு காப்பாற்றி வளர்த்த குரங்கை சந்திக்க ஒரு பராமரிப்பாளர் சென்றுள்ளார்.

அவரை பார்த்த குரங்கு மிகுந்த மகிழ்ச்சியுடன் முதலில் கைகளை பற்றிக்கொண்டு, பின்னர் அன்பாக அணைத்து, அவர் கொண்டுவந்த வாழைப்பழங்களை எடுத்துக்கொள்கிறது. இந்த உருக்கமான காட்சி இணையத்தில் பரவி பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

இந்த வீடியோ, ‘Weird Things Caught’ என்ற X கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1.6 ஆயிரம் லைக்குகள் மற்றும் ஏராளமான உருக்கமான கருத்துகளை பெற்றுள்ளது.  “உன்னை மீண்டும் பார்த்ததில் சந்தோஷம்! வாழைப்பழங்களை கொடு!” என நகைச்சுவையாக ஒருவர் பதிவிட்டிருந்தார்.

“விலங்குகள், மனிதர்களைவிட நன்றியுள்ளவை”, “குரங்கு உணர்ச்சியால் முதலில் அன்பு செலுத்தியது… பிறகு தான் வாழைப்பழங்களை எடுத்தது – இது உணர்ச்சி மிகுந்த தருணம்” என மற்றொரு பயனர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வீடியோ, விலங்குகளுக்கும் அவர்களை பராமரிக்கும் நபர்களுக்கும் இடையே உருவாகும் உண்மையான பிணைப்பை வெளிப்படுத்துகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு கூட, அந்த பராமரிப்பாளரை குரங்கு அன்புடன் நினைவுகூரும் விதத்தில் அணைத்தது, அதை நன்றியுடன் வாழைப்பழங்களை பெற்றுக்கொண்டது போன்ற செயல்கள், விலங்குகளின் உணர்வுகளை தெளிவாக காட்டுகிறது.