
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கூட்டுரோடு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் அதிகமாக இருந்ததால் அடிக்கடி குடித்துவிட்டு குடும்பத்தில் பிரச்சனை செய்து வந்துள்ளார். மேலும் ராமசாமிக்கு அதிகமான மன அழுத்தம் இருந்து வந்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு ராமசாமி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். பின்பு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய போது குடும்பத்தில் நடக்கும் பிரச்சனையை நினைத்து அதிகமாக மது அருந்தியுள்ளார்.
இந்த நிலையில் மது போதையில் என்ன செய்வதென்று தெரியாமல் தேசிய நெடுஞ்சாலையில் ஒட்டியுள்ள விவசாய கிணறு ஒன்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் கிணற்றில் ஒரு சடலம் கிடப்பதை பார்த்து உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவல் படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் ராமசாமி உடலை மீட்டனர். பின்பு ராமசாமியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ராமசாமி தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை வேறு ஏதும் காரணமா? என்று கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.