
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள பொறியியல் கணினி ஆய்வகத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட கம்ப்யூட்டர்கள் மற்றும் அதை சார்ந்த பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கம்ப்யூட்டர்கள் திருடு போனதை தொடர்ந்து நேற்று முன்தினமும் சில கம்ப்யூட்டர்கள் திருடு போனதால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி பல்கலைக்கழகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது ஊ.மங்கலம் அரசகுழி பகுதியைச் சேர்ந்த லிவின் அஜய்(18) என்பவர் கம்ப்யூட்டர்களை திருடியது தெரியவந்தது. இவர் அதே கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அஜய் திருடிய 9 கம்ப்யூட்டர், 15 சிபியு, 4 கீபோர்டு உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.