இந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்த மே மாதம் நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா பதில் தாக்குதல் நடத்தியது. அப்போது இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றம் ஏற்பட்டது.

பின்னர் கடந்த மே 10 அன்று இரு நாடுகளும் போர் நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து நெதர்லாந்தில் நடந்த நோட்டோ உச்சி மாநாட்டில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வந்ததே நான் தான்.

இரு நாடுகளும் சண்டை இட்டால் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள மாட்டோம் என கூறினேன். அதனால் அணுசக்தி போர் தடுக்கப்பட்டது என மீண்டும் கூறியுள்ளார்.

அவரது அந்தக் கூற்றை இந்தியா மறுத்துள்ளது. இருப்பினும் மீண்டும் டிரம்ப் இது குறித்து பேசி உள்ளார். இதனை காங்கிரஸ் இதோடு ட்ரம்ப் 18 ஆவது முறையாக இவ்வாறு கூறியுள்ளார் என மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறது.