
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சித்தாமூர் என்ற பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குரலரசன் என்ற மகன் இருக்கிறார். இந்த சிறுவன் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறான். இந்த சிறுவன் நேற்று அந்த பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்ற நிலையில் அப்பகுதியில் சுற்றி தெரியும் ஒரு உடல்நலம் பாதிக்கப்பட்ட தெரு நாய் சுட்டுக் கொல்வதற்காக வெங்கடேசன் என்பவர் நரிக்குறவர் ஆன சரத்குமார் என்பவரை அழைத்து வந்தார்.
இவர் கொக்கு சுட வைத்திருந்த துப்பாக்கியை வைத்து தெரு நாயை சுட்ட நிலையில் தவறுதலாக அந்த குண்டு சிறுவனின் தலையில் பாய்ந்தது. இதில் அந்த சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் பெற்றோர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு வெங்கடேஷ் மற்றும் சரத்குமார் இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.