
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம் பகுதியில் தொழிலாளி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 51 வயது ஆகும் நிலையில் இவருடைய மகளுக்கு திருமணமாகி ஒரு பெண் பிள்ளை இருக்கிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு தொழிலாளியின் மகள் தனது 9 வயது மகளை வீட்டில் வைத்துவிட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது சிறுமி வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் அவருடைய தாத்தா அங்கு சென்றார்.
அவர் அந்த சிறுமியை மிரட்டி தொடர்ந்து சில நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். தாத்தாவின் தவறான நடத்தையை பொறுத்துக் கொள்ள முடியாத சிறுமி தனது தாயாரிடம் நடந்ததை கூறியுள்ளார். அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக மகளிர் காவல் நிலையத்தில் தந்தையின் மீது புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தொழிலாளியை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி தொழிலாளியை குற்றவாளி என அறிவித்து ரூ. 2000 அபராதமும், சாகும் வரை ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.