
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பச்சமலை எஸ்டேட் தெற்கு பிரிவில், தேயிலை தோட்டத்தில் பணியாற்றி வரும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் முண்டா, அவரது மனைவி மோனிகாதேவி ஆகியோர் குடியிருப்பு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன், அவர்கள் 5 வயது மகள் ரோஸ்லிகுமாரி குடியிருப்பு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென வந்த சிறுத்தை ஒன்று அந்தச் சிறுமியை கவ்விச் சென்றது.

சுற்றியுள்ளவர்கள் அலறிய குரலைக் கேட்டு ஓடி வந்தும் பயனில்லாமல், வனப்பகுதிக்குள் சிறுமியை இழுத்துச் சென்ற அந்த சிறுத்தையைத் தேடி வனத்துறையினர் 14 மணி நேரம் பின்னர் சிறுமியின் உடலை மீட்டனர். இந்த சம்பவம் எஸ்டேட் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியது.
சம்பவத்துக்குப் பின், சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டுகளை அமைத்து, சிசிடிவி கேமராக்களால் கண்காணித்தனர். இந்நிலையில், ஜூன் 26 அதிகாலை, அந்த சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது. தற்போது அந்தச் சிறுத்தையை வேறு பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவதற்காக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சிறுமியை கொன்ற அந்தச் சிறுத்தை 3 நாட்களில் பிடிபட்டது, இதனால் தோட்ட தொழிலாளர்கள் ஓரளவு நிம்மதி அடைந்துள்ளனர்.