திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் சாலையில் நேற்று மாலை பள்ளி வேன் ஒன்று மாணவ மாணவியர்களை ஏற்றி சென்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று வேனின் பின்புறம் பயங்கரமாக மோதியதால் கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் துரிதமாக செயல்பட்டு வேனில் இருந்த மாணவர்கள் மற்றும் காரில் பயணித்த அனைவரையும் பத்திரமாக மீட்டனர். இதனால் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை.

இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் சில மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயை அணைத்தனர்.

இதுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பெரியபாளையம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.