
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி உண்டி மண்டல் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது சகோதரி பாண்டி பத்மா. இருவரும் ஆந்திராவில் 18 வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகளை பெற்றோர்களிடமிருந்து ஒரு லட்ச ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளனர். அதன் பிறகு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் அந்த சிறுவர்களை ஆடு மேய்க்க விட்டுள்ளனர்.
சம்பவம் நடந்த அன்று மன்னார்குடி அருகே மேலவாசல் பகுதியில் நான்கு சிறுவர்கள் ஆட்டு மேய்த்து கொண்டே அழுதவாறு நின்று கொண்டிருந்ததை பார்த்த அந்த பகுதி மக்கள் அவர்களிடம் விசாரித்தனர்.
அப்போது அவர்கள் எங்கள் பெற்றோர் கிடையாது. ஆடு மெய்ப்பதற்காக எங்களை அழைத்து வந்துள்ளனர் என கதறி அழுதனர். இதுகுறித்து வேளவாசல் கிராம நிர்வாக அலுவலருக்கும் 1098 சைல்ட் லைன் எண்ணிற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த தகவலின் படி மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள் நேரில் சென்று நான்கு சிறுவர்களை மீட்டு காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பாண்டி, பாண்டி பத்மா ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.