
உத்திரப்பிரதேச மாநிலம் தௌராஹ்ரா வனப்பகுதியில் உள்ள ஜுகானுபூர் கிராமத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பாபுரி என்ற பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்யும் இளைஞர் மிஹிலால் கௌதத்தை ஒரு சிறுத்தை தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகி வருகிறது.
சிறுத்தை தாக்கிய பிறகும், மிஹிலால் மனம் தளராமல் அதற்கு எதிராக நேரடியாக சண்டையிட்டுள்ளார். சுமார் 5 நிமிடங்கள் அவருக்கும் சிறுத்தைக்கும் இடையே ஆபத்தான போராட்டம் நடைபெற்றது. இதில் மிஹிலால் காயமடைந்தார். இதையடுத்து அங்கிருந்த மற்ற தொழிலாளர்கள் செங்கல்கள் மற்றும் கற்களை எறிந்து சிறுத்தையை விரட்டினர். பின்னர் அந்த சிறுத்தை அந்த இடத்தை விட்டு தப்பியோடியது. காயமடைந்த மிஹிலால் கௌதம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
UP के लखीमपुर खीरी में ईंट भट्टे पर तेंदुए ने अचानक हमला करके 5 लोगो को जख़्मी कर दिया। एक वीडियो सामने आया है। जिसमे एक युवक व तेन्दुए की भिड़ंत हो रही है। लोग बहादुर युवक को छुड़ाने की बजाए वीडियो बनाने व ऊपर से ईंट फैंकते दिखे। कई ईंट तो युवक को ही लगती नज़र आ रही है। इस हमले… pic.twitter.com/J6hDAmWzum
— TRUE STORY (@TrueStoryUP) June 24, 2025
துத்வா டைகர் ரிசர்வ் பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் தற்போது குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி திரிந்து வருகின்றன. குறிப்பாக தௌராஹ்ரா தாலுகாவில் கடந்த சில நாட்களாக சிறுத்தைகள் பல்வேறு இடங்களில் தோன்றுவதை மக்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். இது விவசாயிகளிடம் பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. பயத்தின் காரணமாக பலர் தங்கள் பண்ணை நிலங்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
இந்த நிலைமையை கருத்தில் கொண்டு, வனத்துறை அதிகாரிகள் கிராமங்களுக்கு நேரில் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். துத்வா தேசிய பூங்காவில் வனவிலங்குகளைக் காண சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்ற நிலையில், அதே விலங்குகள் தற்போது சக்கரை கம்பு வயல்களில் தங்கள் தற்காலிக தங்குமிடங்களை அமைத்துள்ளன. மேலும் அந்த வாலிபரும் சிறுத்தையும் சண்டை போட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக வருகிறது.