மத்திய கிழக்கு நாடுகளாகிய ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த 12 நாட்களாக நடந்துவந்த பதற்றமான போர் நிலைமை முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று தனது சமூக வலைதளமான ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதில், “இஸ்ரேலும் ஈரானும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் என்னை அணுகி, ‘அமைதி வேண்டும், இப்போதுதான் நேரம்’ என தெரிவித்தன. இது உலகம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கே வெற்றி” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இரு நாடுகளும் “அன்பு, அமைதி மற்றும் செழிப்பு நிரம்பிய எதிர்காலத்தை நோக்கி செல்லும் வாய்ப்பு உள்ளன” எனக் கூறிய ட்ரம்ப், “நீதியும் உண்மையும் நிறைந்த பாதையில் அவர்கள் பயணிக்க வேண்டும்.

இல்லையெனில் அவர்கள் இழப்பது மிக அதிகம். ஆனால், அவர்கள் எதிர்காலம் வரம்பற்றது மற்றும் வாக்குறுதிகளால் நிரம்பியுள்ளது. கடவுள் இரு நாடுகளையும் ஆசீர்வதிப்பாராக!” என வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிலையில், ஈரான் அரசு வலைத்தளமான IRINN, “கத்தாரில் உள்ள அமெரிக்க தளத்தின் மீது ஈரான் வெற்றிகரமாக தாக்குதல் நடத்திய பின்னர், ட்ரம்ப் போர்நிறுத்தத்திற்கு கெஞ்சினார்” என பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளது.

பிபிசி வெளியிட்ட இந்த தகவல், ட்ரம்பின் பேச்சுகளுக்கு முரணாகவும், அமெரிக்காவின் தூண்டுதலாகவே போர் நிறுத்தம் ஏற்பட்டது என்ற ஈரானின் கூற்றை வலுப்படுத்துவதற்காகவும் பார்க்கப்படுகிறது. இது தற்போதைய சர்வதேச அரசியல் சூழ்நிலையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.