வேலூர் மாவட்டம் அப்துல்லாபுரம் பகுதியில் அமைக்கப்படும் புதிய விமான நிலைய பணிகள் 90% நிறைவடைந்து உள்ள நிலையில், தற்போது சாலையோரம் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிக்காக சாலை ஓரங்களில் பாதுகாப்பு முறைகள் இல்லாமல் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.

இதனால், வாளஜா பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் மற்றும் அவரது மனைவி சரண்யா ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்ற போது நிலைத்தடுமாறி அந்த பள்ளத்தில் தவறி விழுந்து படுகாயம் அடைந்தனர்.

விபத்தில் சரண்யா அவர்களுக்கு பலத்த காயமும், நந்தகுமாருக்கு லேசான காயமும் ஏற்பட்டது. இருவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அடுக்குமாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்துக்குப் பிறகு விரிஞ்சிபுரம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு இல்லாமல் சாலையோரத்தில் தோண்டப்பட்ட பள்ளத்தால் இதுபோன்ற விபத்து நேர்ந்துள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதற்கிடையில், எதிர்காலத்தில் இதுபோன்ற துயர சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளை பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஏற்ப மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.