மகாராஷ்டிராவில் நீட் தேர்வு முறை கேடு தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ள செய்தியை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது எஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது, நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம் பணம் தான் விளையாடுகிறது. நீட் தேர்வு முறையே Moral ஊழல்.

அது போதாது என்று வினாத்தாள் தொடங்கி தேர்வறை முடிவுகள் வரை ஒவ்வொரு நிலையிலும் நிறைந்திருப்பது குளறுபடிகளும் முறைகேடுகளும் தான். நீட்- முதல் கோணல் முற்றிலும் கோணல். ஆர்எஸ்எஸ் பிஜேபி மாநாடுகளில் Showpiece- ஆக உட்கார நேரம் இருக்கும் அதிமுகவினருக்கு இவற்றை எதிர்த்து தங்கள் எஜமான்களிடம் பேச நேரமோ மானமோ இல்லை என்று கூறியிருந்தார்.