தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மாதந்தோறும் 15ஆம் தேதி பெண்களின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் பணம் வரவு வைக்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் 1.14 கோடி பெண்கள் பயன்பெறும் நிலையில் கூடுதல் ஆன பெண்கள் அடுத்த மாதம் முதல் விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விடுபட்ட பெண்கள் மற்றும் ஏற்கனவே விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அதே நேரத்தில்  குடும்பத்தில் யாரேனும் அரசு பணியில் இருந்தால் அந்த குடும்ப தலைவிகள், அரசு பணியில் இருப்பவர்கள், டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களாக அவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்காது.

ஒரு ரேஷன் அட்டையில் உள்ள ஒரு பெண்கள் மட்டுமே மகளிர் உரிமைத்தகையை பெற முடியும். ஆனால் அதே நேரத்தில் இதில் சில விலக்குகளும் இருக்கிறது. அதாவது ரேஷன் அட்டையில் குடும்பத்தலைவி இறந்துவிட்டால் அவர்களின் குடும்பத்தில் 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் திருமணம் ஆகாமல் இருந்தால் அவர்கள் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் கணவனை இழந்த விதவைப் பெண்கள் தனியாக ரேஷன் அட்டை வைத்திருந்தால் அவர்களும் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் பணம் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.