தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் இன்று தன்னுடைய 50 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் தவெக கட்சி நிர்வாகிகள் அவரது பிறந்தநாளை  நாளை கொண்டாடும் விதமாக கோவில்களில் அன்னதானம் மற்றும் சிறப்பு வழிபாடு நடத்தி வருகிறார்கள். அதோடு பேனர்கள் மற்றும் போஸ்டர்களை பல பகுதிகளில் ஓட்டியுள்ளனர்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு மற்றும் நிலக்கோட்டை போன்ற பகுதிகளில் தவெக நிர்வாகிகளால் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் சர்ச்சையான வாசகங்கள் இடம் பெற்றிருந்தது. அதாவது நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தும், திமுகவை உதாசீனப்படுத்தும் வகையில் வாசகங்களும் அந்த போஸ்டரில் இடம் பெற்றிருந்தன.

இது தொடர்பாக திமுக நகர செயலாளர் ஜோசப் கோவில்பிள்ளை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் போஸ்டர் ஒட்டிய கிழக்கு மாவட்ட நிர்வாகியின் மகன் ஜெயச்சந்திரன் என்பவரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து போஸ்டர் ஒட்டிய மற்ற நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும் ஒட்டப்பட்ட போஸ்டர்களை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கிழித்துள்ளனர்.