
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று விசாகப்பட்டினத்தில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி பிரதமர் மோடி தலைமையில் கொண்டாடப்பட்டது. விசாகப்பட்டினம் துறைமுகத்தில் நடக்கும் இந்த கொண்டாட்டத்தில் சுமார் மூன்று லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். இந்த யோகா தினத்தை ஒட்டி நாடு முழுவதும் யோகா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது, உலக மக்களின் அன்றாட அங்கமாக மாறியுள்ளது யோகா. யோகா உலக அமைதிக்கான வழியை காட்டுகிறது. இன்று சர்வதேச யோகா தினமாக அறிவிக்க 175 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளது. மனதின் குரல் நிகழ்ச்சியில் கூட உடல் பருமன் குறித்து பேசியுள்ளேன். யோகாவை நாம் ஒரு மக்கள் இயக்கமாக மாற்றுவோம்.
மனதை ஆசுவாசப்படுத்த, சமாதானப்படுத்த யோகா உதவுகிறது. மீண்டும் ஒருமுறை ஆந்திர மக்களுக்கும், யோகா மேற்கொள்வோருக்கும் வாழ்த்துகள் என்று தெரிவித்தார்.