கடலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது சமீபத்தில் நடைபெற்ற மிகப்பெரிய மாநாட்டில் கடலூரில் உள்ள அனைத்து தம்பிகளும், தங்கைமார்களும் வந்திருந்தனர். இந்தியாவே வியந்து பார்த்த இந்த மாநாடு சமூக நீதிக்காக நடத்தப்பட்ட இந்த மாநாடு இதில் யாரு கண்ணு பட்டதோ என்று தெரியவில்லை. எனக்கு தெரிஞ்சு திமுக தலைவர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் கண்ணு தான் பட்டு இருக்கும்.

ஏனென்றால் அந்த மாநாட்டில் ஒரு முடிவு எடுத்துவிட்டோம். என்ன முடிவு என்றால் வன்னியருக்கு துரோகம் செய்த திமுக ஆட்சியை அகற்ற வேண்டும். வன்னியர்களை நம்ப வைத்து கழுத்து அறுத்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் வீட்டிற்கு செல்ல வேண்டும். அவர்கள் ஆட்சி செய்தது போதும் இன்று அந்த மாநாட்டில் முடிவு எடுத்துவிட்டோம். அதன் பிறகு தான் குழப்பங்கள் சூழ்ச்சிகள் எல்லாம். அந்த மாநாட்டை பார்த்து திமுக பயந்துவிட்டார்கள். எல்லா கட்சிகளும் ஆச்சரியமாக பார்த்தார்கள் அதில் திமுக பயந்துவிட்டது என்று கூறினார்.