தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை நகராட்சி பகுதியில் மொத்தம் 24 வீடுகள் இருக்கும் நிலையில் இந்த வீடுகளில் நிலுவையில் உள்ள வரிகளை வசூலிக்கும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள். அந்த வகையில் நேற்று முன்தினம் வரி வசூல் செய்யும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இவர்கள் பணி மேற்பார்வையாளர் ஓவர்சீயர் ஆனந்த ராமகிருஷ்ணன் தலைமையில் இந்த பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், ஊழியர்கள் வரிவசூல் செய்தனர். அந்த சமயத்தில் ஒரு பெண் தன்னுடைய வீட்டில் குளித்துக் கொண்டிருந்ததாக கூறப்படும் நிலையில் அதனை ஆனந்த ராமகிருஷ்ணன் தன்னுடைய செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார்.

இதனை அந்தப் பெண் பார்த்து நிலையில் அதிர்ச்சி அடைந்து கத்தி கூச்சலிட்டு அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் ஆனந்த ராமகிருஷ்ணன் உட்பட ஊழியர்கள் அனைவரும் அங்கிருந்து திரும்பி சென்றுவிட்ட நிலையில் இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் செங்கோட்டை நகராட்சி ஆணையாளரிடம் புகார் கொடுத்தார்.

அந்த புகாரயின் படி அதிகாரி விசாரணை நடத்திய நிலையில் பின்னர் ஆனந்த ராமகிருஷ்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.