
கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்திலுள்ள சண்டூர் பகுதியில் சுபம் குமார் மனோஜ் என்ற 25 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் டெல்லியில் கம்ப்யூட்டர் இன்ஜினியர் படித்துள்ள நிலையில் அங்கு சில மாதங்கள் வேலை பார்த்தார். அப்போது அவருக்கு சமூக வலைதளம் மூலமாக பல பெண்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பெண்களை காதல் வலையில் வீழ்த்தி தன்னுடைய காம இச்சைக்கு பயன்படுத்த நினைத்த அவர் வீடியோ கால் மூலம் அந்த பெண்களை நிர்வாணமாக வரவழைத்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவிக்கும் பெண்களின் பெயரில் போலியாக சமூக வலைதள கணக்குகள் உருவாக்கி அதில் அவர்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளார்.
அந்தப் பெண்களின் பெயரோடு சேர்த்து அவர்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அதில் அந்த வாலிபர் பதிவிட்டு அவர்களை மிரட்டிள்ளார்.
இதேபோன்று மும்பையைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியின் பெயரில் சமூக வலைதளத்தில் கணக்கு தொடங்கி ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அவர் பதிவிட்டு வந்தார்.
அந்த புகாரின் படி போலீஸார் வழக்கு பதிவு செய்து google நிறுவனத்திடம் இருந்து ஆபாச வீடியோக்கள் பதிவிடப்பட்டது தொடர்பாக சில விவரங்களை பெற்றுள்ளனர். இதைத்தொடர்ந்து கர்நாடகாவுக்கு சென்ற தலைமறைவாக இருந்த அந்த வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் சமூக வலைதளத்தில் போலியாக 10 கணக்குகள் தொடங்கியதும், இதற்காக 90க்கும் அதிகமான இமெயில் ஐடிகளை பயன்படுத்தியதும் தெரிய வந்தது. பின்னர் அவரது செல்போனை வாங்கி போலீசார் ஆய்வு செய்ததில் மொத்தம் 13 ஆயிரத்து 500 ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளது.
இதை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்த நிலையில் வாலிபரை மும்பைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.