உலக நாடுகளுக்கிடையே நிலவும் பதற்றமும், பரபரப்பான யுத்த சூழலும் அதிகரித்து வரும் நிலையில், எதிர்காலத்தில் மூன்றாம் உலகப் போர் இடம்பெறும் என்ற பயமும் பல தரப்பில் எழுந்து வருகின்றது. இஸ்ரேல் – ஈரான், இந்தியா – பாகிஸ்தான், காசா, உக்ரைன் ஆகிய பகுதிகளில் நடந்துவரும் சம்பவங்கள் இந்த அச்சத்தை உறுதிப்படுத்துகின்றன.

ஆனால், இந்த குழப்பமான காலகட்டத்தில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியும் அதேளவிற்கு வேகமாக நகர்கிறது. இதை எதிர்நோக்கிய அறிஞர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் “அமைதி தொழில்நுட்பம்” (Peace Tech) எனும் புதிய கோட்பாட்டை முன்வைத்து இருக்கின்றனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் முன்னாள் அரசியல் விஞ்ஞானி ஆர்விட் பெல், “அனாடிர் ஹொரைசன்” (Anadyr Horizon) எனும் நிறுவனத்தைத் தொடங்கி, “நோர்த் ஸ்டார்” (North Star) எனும் செயற்கை நுண்ணறிவு மென்பொருளை உருவாக்கியுள்ளார்.

இது, உலக தலைவர்களின் நெடுநாள் நடத்தைகள் மற்றும் எதிர்வினைகளை முன்கூட்டியே கணிக்கக்கூடிய திறன் கொண்டதாகும். பொருளாதார தடைகள், தூக்கமின்மை போன்ற சூழ்நிலை விளைவுகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, ஒரு தலைவர் எந்த முடிவை எடுப்பார் என்பதை கணிக்கிறது. இது ஒரு வகையில் அந்த தலைவரின் “டிஜிட்டல் ட்வின்” ஆக செயல்படுகிறது.

“உலகத்தை எப்படி அழிக்கலாம் என்பதைக் கணிக்கவே இந்த மென்பொருள் – அழிக்க அல்ல,” என ஆர்விட் பெல் தெரிவித்துள்ளார். குறிப்பாக ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் மற்றும் கியூபா மீசைல் பிரச்சனை போன்ற கடந்த வரலாற்றுப் போர்களை முன்கூட்டியே கணிக்கவும், எதிர்காலத்தில் அந்த வகையான விபரீதங்களை தவிர்க்கவும் இது பெரும் பயனளிக்கும் என அவர் நம்புகிறார்.

இந்த முயற்சி உலக அரசியலில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றனர்.