இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் 4 வயது குழந்தைகளுக்கான ஓட்டப்பந்தயம் வைக்கப்பட்டது. இதில் ஐந்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர்.

 

இந்நிலையில் போட்டி தொடங்கியவுடன் குழந்தைகள் அனைவரும் போட ஆரம்பித்தனர். அப்போது ஒரு குழந்தை மட்டும் வேகமாக ஓடி இறுதி கோட்டையும் தாண்டி ஓடிக்கொண்டே இருந்தார். இதனைப் பார்த்து அங்கிருந்த அவர்கள் சிரித்துக்கொண்டே ரசித்தனர். அதன் பின் நீண்ட தூரம் ஓடிய பிறகு ஒரு பெண் அவரை நிறுத்தி இறுதிக்கோடு அங்கே உள்ளதை என்று கூறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் நகைச்சுவையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.