
மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 15 வயதுடைய இரண்டு மாணவிகள் வசித்து வருகிறார்கள். இந்த மாணவிகள் முறையே 9 மற்றும் 10-ம் வகுப்பு படித்து வரும் நிலையில் இவர்கள் இருவரும் தோழிகளாக இருந்தனர். இந்த மாணவிகளுக்கு பள்ளிக்கு செல்வதற்கு விருப்பமில்லை என்று கூறப்படுகிறது.
ஆனால் பெற்றோர்கள் இருவரையும் கட்டாயப்படுத்தி படிக்க வேண்டும் என கூறி பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை மாணவிகள் இருவரும் வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் எறும்பு பொடி வாங்கியுள்ளனர். அதை இருவரும் தண்ணீரில் கலந்து குடித்துவிட்டு பின்னர் வகுப்பறைக்கு சென்று விட்டனர்.
சிறிது நேரத்தில் மாணவிகள் இருவரும் மயங்கி விழுந்த நிலையில் சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்த உடனடியாக ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் மாணவிகளை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்படுகிறது.
அதாவது பள்ளிக்கு செல்வதற்கு விருப்பமில்லாததால் மாணவிகள் இருவரும் தற்கொலை முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.