மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதி சேர்ந்தவர் சித்திரை செல்வம். இவர் ஷேர் ஆட்டோ ஓட்டுகிறார். நேற்று முன்தினம் சித்திரை செல்வம் தனது நண்பர்களான விக்னேஷ், சிவகுமார் ஆகியோருடன் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில் இருக்கும் மதுக்கடைக்கு சென்றுள்ளனர்.

அப்போது ஆட்டோவை வழிமறித்த 40 வயதுடைய நபர் தன்னை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இறக்கி விடுமாறு கூறினார். அவர்கள் மது அருந்துவது பற்றி பேசிக் கொண்டிருந்தபோதே அந்த நபர் நானும் உங்களோடு சேர்ந்து மது அருந்தலாமா என கேட்டதாக தெரிகிறது.

பின்னர் நான்கு பேரும் இணைந்து சம்பங்குளம் பகுதியில் இருக்கும் மதுக்கடைக்கு சென்று மதுவாகி விட்டு மீண்டும் ஒத்தக்கடை நோக்கி வந்தனர். ஒரு மயானத்திற்கு அருகில் ஆட்டோவை நிறுத்தி மது குடித்துவிட்டு போதையில் பாடல்களை ஒலிக்க விட்டு நண்பர்கள் மூன்று பேரும் நடனமாடியுள்ளனர்.

அப்போது 40 வயதுடைய நபர் பழைய பாடல்களை போடுமாறு கேட்டுள்ளார். அதற்கு நண்பர்கள் மறுப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த நண்பர்கள் 40 வயதுடைய நபரின் ஆடைகளை கழற்றி நிர்வாணமாகி கற்களால் அடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளில் அடிப்படையில் சித்திரை செல்வம் உட்பட 3 வரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்டவரின் விவரம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.