அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ருபானி உள்பட விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்தனர். விஸ்வாஷ் குமார் என்பவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். புறப்பட்ட ஒரு சில நிமிடங்களில் விமானம் மருத்துவக் கல்லூரி விடுதியில் மீது மோதி விபத்துக்குள்ளானது நாட்டையே உலுக்கியது.

இந்த நிலையில் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து கொல்கத்தா வழியாக மும்பை வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தின் ஒரு என்ஜினல் பழுது ஏற்பட்டுள்ளது. இருப்பினும் திட்டமிட்ட நேரத்தில் விமானி கொல்கத்தா விமான நிலையத்தில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.