உத்திரபிரதேச மாநிலத்தில் யசோதா என்ற 50 வயது பெண் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் மகள் இருக்கும் நிலையில் இவரது மகளுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த திருமணத்திற்கு பிறகு அவளின் மாமியாரோடு யசோதாவின் கணவர் தகாத உறவில் இருந்துள்ளார். இவர்கள் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்ததோடு வெளியே சென்று வந்துள்ளனர். இதனை யசோதா தொடர்ந்து கண்டித்து வந்த நிலையில் சம்பவ நாளில் கணவருக்கும் அவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதில் யசோதாவை அவரது கணவரும் மகளின் மாமியாரும் சேர்ந்து பெட்ரோல் ஊற்றி உயிரோடு தீ வைத்து எரித்தனர். தற்போது பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் யசோதா தன்னுடைய கணவரும் அவருடன் தகாத உறவில் இருந்தால் தன் மகளின் மாமியாரும் தன்னை எரித்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதேபோன்று யசோதாவும் தன்னுடைய தந்தையும் மாமியாரும் சேர்ந்துதான் தன் அம்மாவை எரித்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். மேலும் இந்த சம்பவம் சமூகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.