
சென்னை ராணிப்பேட்டையில் 8 வயது குழந்தை வசித்து வருகிறார். இவருக்கு அவரது தாத்தா பாலியல் தொல்லை கொடுத்ததாக குழந்தையின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது காவல்துறை அதிகாரிகள் குழந்தைக்கு மனநல ஆலோசனை வழங்க உத்தரவிட்டு மருத்துவர் மற்றும் குழந்தைகள் நல அலுவலரிடம் குழந்தையை அழைத்துச் சென்றனர்.
அப்போது இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டது. அப்போது அந்த குழந்தை எனது தாத்தா மீது எந்த தவறும் இல்லை என்றும், தனது தந்தை, தாத்தா மீது புகார் அளித்ததாகவும் அந்த சிறுமி கூறியுள்ளார். வேலைக்குச் செல்லாமல் இருந்ததையும், 70,000 வாடகை பணத்தை தனக்கு தெரியாமல் வாங்கியதாலும் தந்தை மகனை திட்டிய நிலையில், ஆத்திரத்தில் மகனே பொய்யான வழக்கை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து முதியவரை காவல் துறையினர் காப்பகத்தில் தங்க வைத்துள்ளனர்.