அகமதாபாத் விமான விபத்து, இந்தியா முழுவதையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. புறப்பட்ட சில நொடிகளில் விமானம் திசை தவறி பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதியது.

இதில், விமானத்தில் இருந்தவர்கள் மட்டும் அல்லாமல், விடுதி மாணவர்கள் மற்றும் அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியினரும் பலியாகினர். மொத்தம் 274 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் இந்த விபத்து குறித்து இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

விபத்து நேரத்தில், மருத்துவ மாணவர்கள் விடுதியில் மதிய உணவு சாப்பிட்டு கொண்டிருந்தனர். அந்தக் கட்டிடத்தின் மீது விமானம் மோதியதைத் தொடர்ந்து, கூரை மற்றும் சுவர்கள் இடிந்து விழுந்தன. மாணவர்கள் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.

காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டாலும், பலரை காப்பாற்ற முடியவில்லை. சமூக ஊடகங்களில் வெளியாகிய வீடியோக்கள், இந்த விபத்தின் கொடூரத்தன்மையை நேரடியாக காட்டுகின்றன. காட்சி தாங்கமுடியாத வகையில் பரிதாபமாக உள்ளது.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், தங்கள் மனத்துயரத்தையும் இரங்கலையும் பதிவிட்டு வருகின்றனர். “வீடியோவை பார்ப்பது மிகவும் வேதனையாக உள்ளது”,  என பலர் குறிப்பிட்டுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய அனைவரும் இறைவனை வேண்டி வருகின்றனர்.

விமான விபத்து எப்படி நடந்தது, ஏன் நடந்தது என்ற கோணத்தில் விமான புள்ளிவிவரங்கள் மற்றும் பிளாக் பாக்ஸ் மூலம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.