
குஜராத் மாநிலம் அகமதாபாத் ஏர்போர்ட்டிலிருந்து நேற்று லண்டன் புறப்பட்ட விமானம் சில நிமிடங்களில் ஒரு மருத்துவக் கல்லூரி விடுதியின் மேல் விழுந்து வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 242 பேர் பயணம் செய்த நிலையில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்த நிலையில் 241 பேர் உயிரிழந்தனர்.
அதன்பிறகு கல்லூரி மருத்துவ கட்டிடத்தின் மேல் விழுந்ததால் அங்கிருந்தவர்களும் உயர்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே ஏர் இந்தியா நிறுவனம் 241 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் கல்லூரி விடுதியில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்ற விவரம் வெளிவரவில்லை.
இந்நிலையில் நேற்று இந்த விமானத்தில் செல்ல இருந்த ஒரு பெண் டிராபிக்கில் சிக்கியதால் விமானத்தை தவறவிட்டார். இதனால் அவர் உயிர் பிழைத்துள்ளார். அதாவது பூமி சவுகான் என்ற அந்த பெண் லண்டன் செல்லும் அந்த விமானத்தில் செல்ல இருந்த நிலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் பத்து நிமிடங்கள் தாமதமாக ஏர் போர்ட்டுக்கு சென்றார்.
இதனால் விமானம் கிளம்பிவிட்டது. இது பற்றி தற்போது பூமி சவுக்கான் கூறும் போது இன்னும் அந்த விஷயத்திலிருந்து என்னால் மீள முடியவில்லை. அந்த விமான விபத்தை கேட்டு நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன் என்று கூறியுள்ளார். மேலும் 10 நிமிடங்கள் தாமதமானதால் ஒரு பெண் உயிர் பிழைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.